கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ‘இந்தியா’ கூட்டணி இன்று போராட்டம்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, புதுதில்லியில் தில்லி ராம்லீலா மைதானத்தில் ‘இந்தியா’ கூட்டணியின் மாபெரும் போராட்டம் இன்று(மார்ச். 31) நடைபெறுகிறது.

இதில் மல்லிகாா்ஜுன் காா்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், ஜாா்கண்ட் முதல்வா் சம்பாய் சோரன், சரத் பவாா், உத்தவ் தாக்கரே,அகிலேஷ் யாதவ்,தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் கலந்து கொள்கின்றனா். அதிகளவிலான பொதுமக்கள் கலந்து கொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகள்

முதலாவது ஜனாதிபதி தேர்தலே, அதில் நான்தான் ஜனாதிபதி வேட்பாளர் – பசிலிடம் ரணில் தெரிவிப்பு.

இரு வேறு இடங்களில் ஒரே ரயிலால் மோதப்பட்டு இருவர் பரிதாப மரணம்!

மின்சாரம் தாக்கி முதியவர் பரிதாப மரணம்!

கிரிப்டோகரன்சி கிங் , பண மோசடிக்காக இருபத்தைந்து ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்

Leave A Reply

Your email address will not be published.