நடிகை தமிதாவுக்கு விளக்கமறியல்! – கணவரும் கம்பி எண்ணுகின்றார்.

நிதி மோசடியில் ஈடுபட்டனர் எனக் குற்றம் சுமத்தப்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பிரபல சிங்கள நடிகையான தமிதா அபேரத்னவையும் அவரது கணவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

தென்கொரியாவுக்கான விசா பெற்றுத் தருவதாகக் கூறி, 30 இலட்சம் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டனர் என்று அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேநபர்கள் நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.