முதல்வர் இதை செய்துவிட்டால் நான் அரசியலை விட்டு விடுகிறேன்- சவால் விட்ட அண்ணாமலை!

மு.க.ஸ்டாலின் 100 மீட்டருக்கு சேதமடையாத சாலையில் சென்றால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று அண்ணாமலை சவால்விட்டுள்ளார்.

நடப்பாண்டின் மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டின் அரசியல் காட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆட்சியின் முக்கிய தலைவர்கள் தங்களது பரப்புரையை பல பகுதிகளில் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட பாஜக வேட்பாளராக அண்ணாமலை களமிறங்கியுள்ளார். அவர் தற்போது கோவையில் தனது சூராவளி பிரச்சாரத்தை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக சரவணம்பட்டி, கரட்டுமேடு, கேஜி பேக்கரி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அண்ணாமலை பேசுகையில், “கோவை மாநகரில் ஏராளமான பிரச்சினைகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக 100 மீட்டருக்கு நடந்து சென்றால் சாலைகள் மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. இதையெல்லாம் திமுகவினர் சரி செய்யவில்லை.

பாஜக சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தோம். இதைக் கேட்டவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்” என்று கூறினார்.

மேலும், “கிரிக்கெட் மைதானம் எதற்காக காட்டப்படுகிறது என்றால் நான்காயிரம் கோடி ரூபாய் வரை கமிஷன் அடிக்கலாம் என்பதற்காகத்தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் குறைந்தபட்சம் 100 மீட்டருக்கு சேதமடையாத சாலையில் நடந்து சென்றால் நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையை மேம்படுத்த ரூ.1,445 கோடி மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. ஆனாலும் கோவையில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாமல் உள்ளது. குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்திகள்
மொட்டுக் கட்சி சார்பில் மிகச் சிறந்த வேட்பாளர்! – களமிறக்கியே தீருவோம் என்று மஹிந்த திட்டவட்டம்.

ஓமந்தையில் ரயிலுடன் பிக்கப் மோதிய விபத்தில் படுகாயமடைந்தவர் மரணம்!

இளம் மனைவியை கொன்று, 224 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய 28 வயது இளைஞன்.

கோயில் திருவிழாவில் வழங்கப்பட்ட அன்னதானத்தால் ஒவ்வாமை! – நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்…

இல்ல மெய்வல்லுநர் போட்டியில் கார்த்திகைப் பூ அலங்காரம்: உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமையவே பாடசாலை மாணவர்களை அழைத்து விசாரித்தோம்.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த உள்ளோம். அதனால், நீங்கள் ஒதுங்கியிருப்பது நல்லது’ என, அமெரிக்காவுக்கு ஈரான் கடிதம்.

இஸ்ரேல் பிரதமர் பதவி விலக போராட்டம்.

ஐ.பி.எல்., லீக் போட்டியில் சரிந்த குஜராத் அணி 33 ரன் வித்தியாசத்தில் தோல்வி.

திருமலை வீரகத்தி பிள்ளையார் ஆலய காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை திறப்பு.

கோடைகால பாதிப்பு: மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க அறிவுரை

“லிவ் இன்” உறவில் பிரிந்தாலும் ஜீவனாம்சம் தர வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு!

ஆம்னி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 2 பேர் பலி, 30 பேர் படுகாயம்!

Leave A Reply

Your email address will not be published.