ஆம்னி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 2 பேர் பலி, 30 பேர் படுகாயம்!

ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணன் கோவில் அருகே தென்காசியில் இருந்து கோயமுத்தூர் சென்ற ஆம்னி பேருந்து தற்காலிக பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே முத்துசெல்வி, கார்த்திக் என்ற இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

உடனே சம்பவ இடம் விரைந்த வத்திராயிருப்பு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவத்தால் மதுரை கொல்லம் தேசிய – நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அதன்பின், காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார்.

மேலதிக செய்திகள்
மொட்டுக் கட்சி சார்பில் மிகச் சிறந்த வேட்பாளர்! – களமிறக்கியே தீருவோம் என்று மஹிந்த திட்டவட்டம்.

ஓமந்தையில் ரயிலுடன் பிக்கப் மோதிய விபத்தில் படுகாயமடைந்தவர் மரணம்!

இளம் மனைவியை கொன்று, 224 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய 28 வயது இளைஞன்.

கோயில் திருவிழாவில் வழங்கப்பட்ட அன்னதானத்தால் ஒவ்வாமை! – நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்…

இல்ல மெய்வல்லுநர் போட்டியில் கார்த்திகைப் பூ அலங்காரம்: உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமையவே பாடசாலை மாணவர்களை அழைத்து விசாரித்தோம்.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த உள்ளோம். அதனால், நீங்கள் ஒதுங்கியிருப்பது நல்லது’ என, அமெரிக்காவுக்கு ஈரான் கடிதம்.

இஸ்ரேல் பிரதமர் பதவி விலக போராட்டம்.

ஐ.பி.எல்., லீக் போட்டியில் சரிந்த குஜராத் அணி 33 ரன் வித்தியாசத்தில் தோல்வி.

திருமலை வீரகத்தி பிள்ளையார் ஆலய காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை திறப்பு.

கோடைகால பாதிப்பு: மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க அறிவுரை

“லிவ் இன்” உறவில் பிரிந்தாலும் ஜீவனாம்சம் தர வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு!

Leave A Reply

Your email address will not be published.