அவிசாவளை ஹோட்டல் அறையில் 23 வயது இளம்பெண் மரணம் : சந்தேக நபர் கைது.

அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விடுதியில் தங்கியிருந்த தம்பதிகளில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக நேற்று முன்தினம் (10) மாலை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் நேற்று மாலை, நபர் ஒருவருடன் ஹோட்டலுக்கு வந்து அங்குள்ள அறையொன்றில் தங்கியிருந்த நிலையில், சிறிது நேரத்தில் பெண் மயங்கி விழுந்துள்ளதாக அவருடன் இருந்த நபர் ஹோட்டல் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளார்.

இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்த போது , பெண்ணுடன் இருந்த இளம் சந்தேக நபர் , விசாரணையின் போது மாற்றி மாற்றி கதை சொன்னதால் காவல்துறை சந்தேக நபரை கைது செய்துள்ளது.

சடலம் , சம்பவம் இடம்பெற்ற இடத்தில் உள்ள பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.