25,000 பள்ளி ஆசிரியர்கள் நியமனம் ரத்து – உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை!

ஆசிரியர்களின் பணி நியமனத்தை ரத்து செய்த தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில பள்ளிக்கல்வித் துறை மூலம்25,753 பேர் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து இதில் ஊழல் நடந்திருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்றம் அந்தப் பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டது. உடனே இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி,பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர்அடங்கி அமர்வு முன்பாக வந்தது. அப்போது, அரசு வேலை மிகவும் அரிதானது. அதன் மீதுள்ள பொதுமக்களின் நம்பிக்கை பொய்த்துப் போனால் எதுவும் மிஞ்சாது.

இது, அமைப்பு முறை சார்ந்த மோசடி. சமூக இயக்கத்துக்கு அரசு வேலைமிகவும் முக்கியமானது. இதுபோன்ற நடவடிக்கைகளால் மக்கள் அதன் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிடுவர். அதை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்? ஆசிரியர் பணி நியமனங்களுக்கான தரவுகள் மற்றும் ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பராமரிக்க நீங்கள் கடமைப்பட்டவர்கள்.

ஆனால், இப்போது அந்த தரவுகள் உங்களிடம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. உங்களுக்கு சேவை வழங்குபவரிடம் உள்ள தரவுகளை கட்டுப்பாட்டுடன் பராமரிப்பது உங்களின் கடமை. சிபிஐ விசாரித்து வரும் 8,000 ஆசிரியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதியானால் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அவர்களுக்கு பொருந்தும்.

மேலும், அவர்கள் தாங்கள் பெற்ற சம்பளத்தை திரும்பக் கொடுக்க வேண்டும் எனக் கூறி 25,753 ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

மேலதிக செய்திகள்

மீண்டெழுந்துவிட்டது ஐ.தே.க.! – இனித்தான் அரசியல் ஆட்டம் சூடுபிடிக்கும் என்கிறார் பாலித.

நிரந்தர அரசியல் தீர்வு இல்லாமல் எவ்வித நல்லிணக்கமும் ஏற்படாது! – நாடாளுமன்றத்தில் சுமந்திரன் சுட்டிக்காட்டு.

ரணிலுக்கு ஆதரவா? – இன்னும் முடிவில்லை என்கிறார் மஹிந்த.

விசா மோசடி மத்திய வங்கி மோசடியை விட பன்மடங்கு அதிகம்! – ஹக்கீம் தெரிவிப்பு.

நீதிமன்றத்தை அவமதிக்கும் லால்காந்தவின் கருத்தால் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை!

புதிய விசா முறைமை ஊடாக வருடாந்தம் 1800 கோடி ரூபா மோசடி! – சபையில் அம்பலப்படுத்திய சம்பிக்க.

விசா மோசடியை அம்பலப்படுத்திய இளைஞருக்கு நெருக்கடி கொடுத்தால் பெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும்! – அரசுக்கு ஜே.வி.பி. கடும் எச்சரிக்கை.

புதிய சோதனையில் 6G வேகம் 100 Gbps ஐ எட்டியது : வேகம் சராசரி 5G செல்போன்களை விட 500 மடங்கு.

புடின் ஐந்தாவது முறையாக நேற்று பதவியேற்றார்!

ரணில் செல்லும் பாலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் NPP அரசாங்கமும் முன்னோக்கி செல்லும்..- அனுர.

யாழ் வெப்ப பாரிசவாத இறப்புக்கள் அதிகரிப்பு.. முதியவர்கள் தொடர்பில் அவதானம்.. வைத்திய நிபுணர் பேரானந்தராஜா.

அவசர அவசரமாக சஞ்சு சாம்சனுக்கு அவுட் கொடுத்த மூன்றாவது நடுவர்! இதான் ஐபிஎல் ஸ்க்ரிப்ட்?

வேகமாக பரவும் மர்ம நோய்… கொத்து கொத்தாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மக்கள்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

Leave A Reply

Your email address will not be published.