சம்யுக்தா கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுகின்ற காட்சி.

நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனம் மற்றும் பாலாஜி இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. ஆரம்பத்தில் எதிர்த்துப் போராடிய பாலாஜி, பின்பு அவர் பக்கமாக வந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சுரேஷை எதிர்த்து நிற்பதற்காக அவர் சனத்திற்கு வாதாடியது எப்படிப்பட்ட யுக்தி என்று தெரியவில்லை. இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் சம்யுக்தா மற்றும் ஆரி இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புதிய புரோமோவில் சம்யுக்தா கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுவதைப் பார்க்க முடிகிறது.

அவரின் நான்கு வயது மகனுக்கு இன்று பிறந்தநாள் என்பதால், வீட்டில் இருந்தபடியே அவர் பேசும் வீடியோவை பிக்பாஸ் வெளியிட, அதனை பார்த்த அவர் தாய் பாசத்தால் கதறி அழுகிறார். சக போட்டியாளர்கள் அவரை ஆறுதல் படுத்துவதை காணமுடிகிறது.

Leave A Reply

Your email address will not be published.