சட்டவிரோதமாக இயங்கி வந்த தனிமைப்படுத்தல் நிலையம் சுற்றிவளைப்பு!

இலங்கையில் சட்டவிரோதமாக நடாத்தி வந்த தனிமைப்படுத்தல் நிலையம் சுற்றிவளைப்பு!

களனி, ஹுனுபிடிய பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடாத்திச் செல்லப்பட்ட தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் ஒன்று நேற்று பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்த இரண்டு பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பின்னர், அங்கிருந்தவர்கள் குறித்த இடத்திலேயே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த இடத்தினை நடாத்திச் சென்றவர்களுக்கு சுகாதார பிரிவினர் கடுமையாக எச்சரிக்கை விடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.