அவ்ளோ தான் லைப்.. ஜனநாதனை பார்த்து கண் கலங்கிய விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் தான் SP ஜனநாதன். படங்களின் எண்ணிக்கையை விட தரத்தின் மீது நம்பிக்கை உடையவர். இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை போன்ற படங்களை இயக்கியவர். கமெர்ஷியல் விஷயங்களையும் கலந்து தான் சொல்ல வந்த கருத்தை பதிவிடுவதில் வல்லவர் இவர்.

விஜய் சேதுபதி ஸ்ருதிஹாசன் நடிப்பில் லாபம் படத்தை இயக்கியுள்ளார், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்துவருகிறது. இயக்குனர் தன் வீட்டில் சுயநினைவில்லாமல் இருந்தது கடந்த வியாழக்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டது. குடும்ப டகத்தரின் அறிவுரையில் சென்னை க்ரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

61 வயதான அவரை அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அவர் மூளை சாவு அடைந்துவிட்டார், இறந்துவிட்டார் என்று கூட வதந்திகள் பரவப்பட்டது. அங்கு சமீபத்தில் கூட விஜய் சேதுபதி சென்றார். இது பற்றி நடிகை சரண்யா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“சுயநினைவின்றி படுக்கையில் இருந்த ஜனநாதனை பார்த்த விஜய் சேதுபதி அவரை தட்டி எழுப்ப முயற்சி செய்திருக்கிறார். அவர் ஜனநாதனை தட்டுவதை பார்த்தவர்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டார்களாம்.

உடனே விஜய் சேதுபதிக்கு கோபம் வந்துவிட்டதாம். அவர் என் இயக்குநர், நான் தட்டினால் அவருக்கு என் குரல் கேட்கும், அவர் கண்டிப்பா எழுந்துவிடுவார் என்றாராம். விஜய் சேதுபதி எவ்வளவோ தட்டியும் ஜனநாதன் கண் விழிக்கவில்லை. இதை பார்த்த விஜய் சேதுபதிக்கு கவலையாகி அழுது கொண்டே “அவ்ளோ தான் லைப், அவ்ளோ தான் லைப்.” என கூறிக்கொண்டே அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.” என சரண்யா கூறியுள்ளார்.

இன்று காலை 10 07 மணிக்கு மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டதாக லாபம் தயாரிப்பு நிறுவனம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.