நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் சென்.நீக்கிலஸ் அணி வெற்றி பெற்றது

தீவக கால்பந்தாட்ட லீக்கின் அலுவலக திறப்பு விழா (14) ஆம் திகதி புதன்கிழமை அன்று வேலனையில் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக நாவாந்துறை சென்.நீக்கிலஸ் விளையாட்டுக் கழக அணிக்கும், தீவக தெரிவு கால்பந்தாட் அணிக்கும் இடையிலான காட்சி கால் பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. இதில் 4:1 என்ற கோல் கணக்கில் சென்.நீக்கிலஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.

சென்.நீக்கிலஸ் விளையாட்டுக்கழக அணிசார்பில் ம.றொக்சன், 2 கோலினையும், ஜெ.ஜெரோம், வி.விக்னேஷ் ஆகியோர் தலா ஒரு கோலினை பதிவு செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.