அதை காமெடியாகத்தான் செய்தேன். ஆனால் உண்மையிலேயே எல்லோரும் சும்மா உட்கார்ந்தால் எப்படி இருக்கும். உணர வைத்த இறைவன்.

தமிழ் திரையுலகில் தற்போது நடிக்கவில்லை என்றாலும், மீம் கிரியேட்டர்கள் மூலம் நம்மை நாள்தோறும் சிரிக்கவைத்து வருகிறார் நடிகர் வடிவேலு.

இவர் கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் வடிவேலு சமீபத்தில் பேசியதில் ” கொரோனாவால் பீதி ஏற்பட்டு உள்ளது. வெளியே போக கூடாது. யாரையும் தொட்டு பேசக்கூடாது. கை கொடுக்க கூடாது என்கின்றனர்.

மருத்துவ உலகத்தையும், மனித உலகத்தையும் மிரட்டி வைத்துள்ளது கொரோனா. இந்த மாதிரி யாருமே பார்த்தது இல்லை.

அதை தூக்கினால்தான் எல்லோரும் வெளியே வர முடியும். ஒரு படத்தில் சும்மா உட்காருவது எவ்வளவு கஷ்டம் என்று சவால் விட்டு நடித்து இருந்தேன்.

அதை காமெடியாகத்தான் செய்தேன். ஆனால் உண்மையிலேயே எல்லோரும் சும்மா உட்கார்ந்தால் எப்படி இருக்கும் என்று உணர வைத்து இருக்கிறான் இறைவன் “. என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.