வர்த்தகரிடம் கப்பம் பெற்ற வழக்கில் அமைச்சர் பிரசன்னவுக்கு இரு வருடக் கடூழியச் சிறை.

வர்த்தகர் ஒருவரிடமிருந்து 6 கோடி 40 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.

வர்த்தகர் ஒருவரிடமிருந்து 6 கோடி 40 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற சம்பவம் தொடர்பில் உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பமிட்டமை தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், மனுதாரருக்கு 2 கோடி 50 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மற்றைய அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் பிரதிவாதி விடுவிக்கப்பட்ட்டுள்ளார்.

அதேவேளை, ஏனைய பிரதிவாதிகளை அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.