மாவிலங்கத்துறையில் கைக்குண்டு ஒன்று மீட்பு.

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவின் ஆரையம்பதி – மாவிலங்கத்துறையில் இன்று கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மாடு மேய்ப்பதற்காகச் சென்ற ஒருவர் வயல் காணி ஒன்றில் கைக்குண்டு ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார்.

உடனே காத்தான்குடிப் பொலிஸாருக்கு இந்தத் தகவலைத் தெரியப்படுத்தியதையடுத்து குறித்த இடத்துக்குச் சென்ற பொலிஸார், கைக்குண்டை மீட்டதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.