இன்றைய பரீட்சையின் சில வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில்…….

மேல்மாகாண கல்வி திணைக்களத்தினால் இன்று (01) நடத்த திட்டமிடப்பட்டிருந்த பாடசாலை வருட இறுதிப் பரீட்சையின் சில வினாத்தாள்கள் நேற்று (29) இரவு சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இன்று (01) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆசிரியர்கள் குழுவொன்று முறைப்பாடு ஒன்றையும் சமர்ப்பித்துள்ளனர்.

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான வருட இறுதி மதிப்பீட்டுப் பரீட்சைகள் இந்த நாட்களில் நடைபெறுகின்றன.

அதன்படி, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திற்கான தேர்வு இன்று நடத்த திட்டமிடப்பட்டது.

எவ்வாறாயினும், மேல்மாகாண கல்வி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரம் 10 இன் விஞ்ஞானம் முதலாம் வினாத்தாள் மற்றும் தரம் 11 தொடர்பான விஞ்ஞான இரண்டாம் வினாத்தாள் நேற்று மாலை 7 மணி முதல் 8 மணி வரை சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை ஹோமாகம, மொரட்டுவ மற்றும் கம்பஹா பிரதேசங்களில் ஆகும்.

மேலும், நேற்று இரவு சமூக வலைத்தளங்களில் பரிமாறப்பட்ட வினாத்தாள்களை இன்று மாணவர்கள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

More News

பங்களாதேஷ் தலைநகர் 7 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி பலி.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணிக்கும் இடையில் சந்திப்பு.

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் , ஜப்பானில் பெரிய மோசடி?

மோசடி செய்து விட்டு தப்ப முயன்ற உள்ளுராட்சி மன்ற உறுப்பினர், யாழ்.விமான நிலையத்தில் கைது

சக்கர நாற்காலி வழங்கப்படாததால் ஏர் இந்தியா பயணி மரணம்

சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்பும் முயற்சி : என் தாயின் நிலை, எந்தத் தாய்க்கும் வராமலிருக்கட்டும் : சாந்தனின் சகோதரன் மதி சுதா

Leave A Reply

Your email address will not be published.