33 ஆண்டு கால அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி இன்றுடன் நிறைவடைகிறது.

கடந்த 1991 ஆம் ஆண்டு அசாமில் இருந்து மாநிலங்களவை உறுப்பினரான மன்மோகன் சிங்கிற்கு, நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, 5 முறை அசாமில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான மன்மோகன் சிங், கடந்த 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான மன்மோகன் சிங்கின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங், 33 ஆண்டு கால அரசியல் பயணத்தில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவரை வாழ்த்தி, 3 பக்க கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுதியுள்ளார்.

அதில், ஒரு சகாப்தம் முடிவுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளார். நடுத்தர வர்க்கத்தினருக்கு நாயகனாகவும், துடிப்புமிக்க இளைஞர்களுக்கு தலைவராகவும், தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டியாகவும் மன்மோகன் சிங் விளங்கியதாக கார்கே புகழாரம் சூட்டியுள்ளார்.

அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், உண்மை மற்றும் நேர்மையின் குரலாக, வாய்ப்பு கிடைக்கும் போது நாட்டு மக்களிடம் பேசுவீர்கள் என்று நம்புவதாக கார்கே குறிப்பிட்டுள்ளார். மன்மோகன் சிங் உடன், 9 மத்திய அமைச்சர்கள் உட்பட 54 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

மேலதிக செய்திகள்

வடக்கில் அனுரகுமாரவின் போஸ்டரால் குழப்பம்! – கல்விப் புலத்தில் அதிருப்தி

துருக்கி கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 29 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பின்லாந்து பள்ளி ஒன்றில், மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் 3 பேர் காயம்.

தைவான் நாட்டில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுனாமி எச்சரிக்கை.

பெண்களை அவமானப்படுத்தும் கட்சி தி.மு.க., பா.ஜ.க, மாநில தலைவர் அண்ணாமலை.

ராஜிவ் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட மூவரும் , இன்று சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பு.

மாலையில் இடியுடன் கூடிய மழை.

மாற்றுத்திறனாளி சிறுவர்கள் உள்ள பாடசாலைகளுக்கு இலவச மதிய உணவு – சுசில் பிரேமஜயந்த.

இலங்கை அணி 192 ஓட்டங்களால் சிறப்பான வெற்றி.

டிக்கெட் பரிசோதகரை ரயிலில் இருந்து தள்ளி கொலை செய்த பயணி… கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

Leave A Reply

Your email address will not be published.