மைத்ரி மீது , இந்தியா ராஜதந்திர தாக்குதல்

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரை சந்திப்பதற்கு கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக மைத்ரி, இரகசிய பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியதாக பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே குறித்த சந்திப்பிற்கு முன்னாள் ஜனாதிபதி கால அவகாசம் கோரியிருந்தார்.

ஆனால் அந்த கோரிக்கையை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.