காய்ச்சல் பரவும் அபாயம் : நீண்ட தூர பேருந்து நிறுத்தங்களில் உள்ள உணவகங்களில் இருந்து கவனமாக சாப்பிடுங்கள் : GMOA

நீண்ட தூர பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்கள் உள்ளிட்ட உணவகங்களில் உணவு உண்ணும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரியின் பல அலுவலகங்களில் சில காய்ச்சல்கள் பதிவாகியுள்ளதாகவும், அது தொற்றுநோயாக மாறவில்லை எனவும், தேவையற்ற அச்சம் தேவையில்லை எனவும், வெளியில் இருந்து எடுக்கப்பட்ட உணவு தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அசுத்தமான உணவு மற்றும் பானங்கள் மற்றும் நீரால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும், எனவே உணவு விற்பனை நிலையங்களில் இருந்து , மக்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்கள் தொடர்பில் இருமுறை சிந்திக்க வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சம்மில் விஜேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தொலைதூரப் பேருந்துகளின் நிறுத்தங்களில் இயங்கும் சிற்றுண்டிச்சாலைகளில் பயன்படுத்தப்படும் நீர், கழிவு நீரை அகற்றுதல், உணவுப் பொரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் எண்ணெயை அகற்றுதல் போன்றவற்றில் பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளதாக டொக்டர் சம்மில் விஜேசிங்க சுட்டிக்காட்டுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.