பாகிஸ்தானில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்ததால் 18 பேர் பலி!

பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததால் குறைந்தபட்சம் 18 பேர் பலியானதுடன் மேலும் 48 பேர் காயமடைந்துள்ளனர்.

அதன்படி ,பலோசிஸ்தான் மாகாணத்தின் குஸ்தார் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் ,பலோசிஸ்தானின்; வாத் நகரிலிருந்து சிந்து மாகாணத்தின் தாது நகரை நோக்கி யாத்திரிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்று இவ்வாறு விபத்துகு;குள்ளாகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் எனவும், மேலும் மூவர் வைத்தியசாலையில் உயிரிழந்தனர் எனவும், கஸ்தார் நகர பிரதி ஆணையாளர் பஷீர் அஹமத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.