இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக்-21 விமானம் விபத்து: பைலட் உயிரிழப்பு!

இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக்-21 (MIG-21) ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பைலட் உயிரிழந்தார்.

இந்திய விமானப் படை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், நேற்று இரவு, இன்று மாலை, 8:30 மணியளவில், IAF-ன் MiG-21 விமானம், பயிற்சியின் போது மேற்கு செக்டாரில்பறந்து விபத்துக்குள்ளானது என்று பதிவிட்டிருந்தது. அதாவது, ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில், இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் – 21 ரக போர் விமானம் நேற்று மாலை பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது.

அப்போது, பாலைவன தேசிய பூங்கா பகுதியில் இரவு 8:30 மணியளவில் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தை இயக்கிய பைலட் விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை உறுதிப்படுத்திய இந்திய விமானப் படை, ‘இன்று மாலை விமான விபத்தில் விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹாவின் சோகமான மறைவை IAF ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறது மற்றும் அவரது குடும்பத்துடன் உறுதுணையாக விமானப் படை நிற்கும்’ என்று ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக இந்திய விமானப் படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் கடந்த 1963ம் ஆண்டு மிக் ரக விமானங்கள் இணைக்கப்பட்டன. 874 மிக் ரக விமானங்கள் ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இதில், 400 விமானங்கள் விபத்தை சந்தித்துள்ளன.இதில், 200 பைலட்கள் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் 5 மிக்-21 ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகி 3 பைலட்கள் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: சாதிக்க எதுவும் தடையில்லை..! அரசு வேலையில் சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டை

இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 14 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு மாதத்திற்குள் மேலும் ஒரு விபத்தை இந்திய விமானப் படை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.