5 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத கெஜ்ரிவால் – நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை!

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் 5 முறை சம்மன் அனுப்பியும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், அமலாக்கத்துறை நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

டெல்லியில் மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஐந்தாவது முறையாக சம்மன் அனுப்பியது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்தார்.

இந்தசூழலில் டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணையை வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி நடத்தவுள்ளதாக டெல்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனிடையே எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்ததாக பாஜக மீது கூறப்பட்ட புகார் தொடர்பாக 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காவல்துறை நோட்டீஸ் அளித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.எல்.ஏக்களை பாஜகவைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டதாகவும், அவர்கள் கட்சியிலிருந்து விலக, 25 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாகவும், அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! – சஜித் பிரேமதாச

ஹாலிவுட் நடிகர் கார்ல் வெதர்ஸ் (Carl Weathers) மரணம்!

ரயில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு 600 கைதிகள் விடுதலை!

வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கம் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிப்பு.

சாந்தன் இலங்கை வர சிறீதரன், மனோ கூட்டாகக் கோரிக்கை : பரிசீலிப்பதாக ரணில் உறுதி

யாழில் விபத்தில் காயமடைந்தவர் நிமோனியா காய்ச்சலால் மரணம்!

இளம் குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிக்கொலை!

கிளிநொச்சியில் விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம்!

ஜனாதிபதி வேட்பாளர் யார்? பஸிலின் வருகைக்காக காத்திருக்கும் ‘மொட்டு’.

சைக்கிளில் சென்ற நபர் கீழே வீழ்ந்து கழுத்து முறிந்து சாவு!

“எங்கள் மருமகன் தமிழக முதல்வராவாரா? – விஜய்யின் கட்சி தொடர்பில் மனோவின் ‘பேஸ்புக்’கில் இப்படிப் பதிவு.

தமிழர் தேசத்தின் கறுப்பு நாள் இன்று கிளிநொச்சியில் சுதந்திர தின எதிர்ப்புப் பேரணி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு.

இளைஞர் கடத்தப்பட்டு காட்டில் வைத்து தாக்குதல் – சந்தேகநபர் ஒருவர் கைது.

மூளை நரம்பு வெடித்து மன்னார் இளைஞர் சாவு – ஐஸ் போதைப்பொருள் பயன்பாடே காரணம்.

குடலில் கிருமித் தொற்றால் இளம் தாய் பரிதாப மரணம்.

யாழில் சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டங்களுக்குத் தடையுத்தரவு கோரும் மனு நிராகரிப்பு!

ஜனாதிபதி தலைமையில் இன்று சுதந்திர தினக் கொண்டாட்டம்!

Leave A Reply

Your email address will not be published.