ஜூலையில் நாடாளுமன்றம் கலைப்பு?

எதிர்வரும் ஜூலை மாதமளவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு முதலில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

புலனாய்வு அமைப்புகளின் அறிக்கை மற்றும் உள்ளக கருத்து கணிப்புகளை அடிப்படையாகக்கொண்டே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த முடிவை எடுத்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.

எதிர்வரும் செப்டெம்பர் 18 மற்றும் ஒக்டோபர் 18 இற்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்காக வரவு – செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

எனினும், அதற்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்தினால் அதற்கான நிதி எவ்வாறு ஒதுக்கப்படும் என கேள்வி எழுப்பப்படுகின்றது. குறைநிரப்புப் பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைத்து நிதியைப் பெறலாம் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அதேவேளை, பொதுத் தேர்தல் நடைபெற்று முதல் தடவையாக நாடாளுமன்றம் கூடி இரண்டரை வருடங்கள் சென்ற பின்னர் அதனை எந்நேரம் வேண்டுமானாலும் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. ஆனால், இடைக்கால ஜனாதிபதி அதாவது நாடாளுமன்றம் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னர் அதனைக் கலைக்கும் அதிகாரம் உள்ளதா என்ற சட்ட ரீதியிலான சர்ச்சையையும் சிலர் கிளப்புகின்றனர்.

More news

ஜனாதிபதி தலைமையில் 28, 29 இல் யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள்!

அம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைப்பதற்குத் திட்டம்! – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் வருடத்துக்கு ஒரு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு “ஜனாதிபதி புலமைப்பரிசில்கள்” – 360 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு.

இந்திய மீனவப் படையெடுப்புகள் வடக்கில் தீவிர மோதலை ஏற்படுத்தும் அறிகுறிகள் .வலைகளை அறுத்த இந்திய மீனவர்கள். உதவிக்கு வந்த இலங்கை கடற்படை!நுவரெலியாவில் இன்று குதிரை ஓட்டப் போட்டி!

தமிழினத்துக்குத் துரோகம் செய்துகொண்டு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் இருக்க வேண்டாம்! – தென்கயிலை ஆதீன முதல்வர் வலியுறுத்து.

யாழில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வு!

இந்திய மீனவர் விடுதலை தொடர்பில் இன்று விசேட பேச்சு!

சென்னையில் பயங்கரம்! காதல் திருணம் செய்த இளைஞர் ஆணவப் படுகொலை – 4 பேர் கைது!

இலங்கை இந்தியாவின் பிராந்தியமா? – ஹரினின் கருத்துக்கு சு.க. கடும் கண்டனம்.

பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு!

தேர்தல்களில் வெற்றி வாகை சூடுவோம்! – புதிய அரசியல் கூட்டணியின் முக்கியஸ்தர் சுசில் சூளுரை.

ஒருதலைக் காதல் விவகாரம்: தென்னிலங்கையில் பாடசாலை மாணவி ஒருவர் வெட்டிக்கொலை!

கச்சதீவு திருவிழாவில் 4 ஆயிரம் இலங்கையர்கள் பங்கேற்பு! – இந்தியர்கள் புறக்கணிப்பு.

விமான நிலைய ஊழியர் போராட்டம் காரணமாக ஸ்ரீலங்கன் விமானங்கள் தாமதம்!

200 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள்! பின்னணியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்

புறநகர் ரயில்கள் ரத்து: கூடுதல் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

Leave A Reply

Your email address will not be published.