விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்பு!

விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர் கடந்த 4-ம் தேதி தனது உதவியாளர் கோபிநாத்துடன் சிம்லா, லடாக் பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

சிம்லா நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது, இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த கார் ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் அங்கிருந்த பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் சடலமாகவும், கோபிநாத் காயங்களுடனும் மீட்கப்பட்டார்.

இதனையடுத்து மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இதற்கிடையில் விபத்து நடந்த இடத்திலிருந்த ரத்த கறைகள், திசுக்கள் சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பப்பட்டன.

இந்நிலையில் விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்திலிருந்து அவரது உடலை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் சென்னை கொண்டுவரப்பட உள்ளது.

மேலதிக செய்திகள்

நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்!

ரயில் மோதி 14 வயது சிறுவன் சாவு! – தம்பலகாமத்தில் துயரம்.

பலாங்கொடை பிரபல தமிழ்ப் பாடசாலையின் உயர்தர மாணவி சடலமாக மீட்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் ஜனாதிபதியை நியமிப்பதற்கு ரணில் முயற்சி.

நாளை முதல் அமுலுக்கு வர இருக்கின்ற தொடர்பாடல் சட்ட திட்டங்கள்.

பாகிஸ்தான் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

கடையொன்றில் துப்பாக்கிச் சூடு பெண் ஒருவர் காயம்.

காமினி ஜயவிக்ரம பெரேராவின் இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி.

இரண்டாவது போட்டியிலும் இலங்கை வெற்றி பெற்றது.

விவசாயிகளின் பாதையில் ஆணி அடிக்கும் பாஜக அரசு: ராகுல் காந்தி காட்டம்

ஜம்மு-காஷ்மீரில் மூன்று சகோதரிகள் தீயில் கருகி பலி!

தமிழ்நாடு அரசின் உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி – சட்டப்பேரவையில் பரபரப்பு!

பாண்டிருப்பு கடற்கரையில் வயோதிபர் சடலமாக மீட்பு!

யாழில் தமிழக சினிமா கலைஞர் நிகழ்வுகள் தொடர்பில் தலைமைகள் கலந்து பேசி பொது முடிவெடுக்க வேண்டும் – முற்றவெளி சம்பவம் தொடர்பில் மனோ கருத்து.

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

இலங்கை வரும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி!

Leave A Reply

Your email address will not be published.